இயக்குநர் கே வி நந்தா இயக்கிய இந்தப் படத்தில், விமல்(வேலன் ) சூரி(ஒரப்பு) , ஸ்ரீதா ராவ்,(பனிமலர் )கேஜிஎஃப் ராம்,(வளவன்) தேவதர்ஷினி(செல்வி), நமோ நாராயணன், செந்தில் வினோதினி, டி.எஸ் ஆர், சக்தி சரவணன், ராமர் , உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். காதல் மோதல் காமெடி இவைகளை மையப்படுத்திய இந்தப் படத்திற்கு ஜான் பீட்டர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க
கதை களம்
சிவகங்கை மாவட்டம் மரக்காத்தூர் என்ற கிராமத்தில் வேலன் என்ற கதாபாத்திரத்தில் விமலும் , ஒரப்பு என்ற கதாபாத்திரத்தில் சூரியும் , செய்யும் அட்ராசிட்டி குடித்துவிட்டு தினமும் இரவில் 11 மணிக்கு யாரையும் தூங்க விடாமல் திருடன் திருடன் என்று கதவைத் தட்டி ஊரையே அல்லோகல படுத்துகிறார்கள். மற்றொரு இரவில் பட்டாசு வைத்து எல்லோரையும் எழுப்பி விடுகிறார்கள். மற்றும் 100 நாள் திட்டத்தில் வேலை செய்பவர்களை வேலை செய்யாதீர்கள் என்று அதையும் கெடுக்கிறார்கள்
இப்படி ஊருக்குள் மாமனும், மச்சானும், சேர்ந்து செய்யும் ரகளையால் நிம்மதி இழந்து ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து விமலை மலேசியாவுக்கு வேலைக்கு அனுப்பி வைக்கிறார்கள
மலேசியா சென்று அங்கும் வேலையில்லாமல் திரும்பும் விமலுக்கு ராமர் மலேசியா லாட்டரி 10 கோடி விழுந்தது என்று சூரியிடம் பொய் சொல்ல சூரி அதை வைத்து கல்லா கட்டுகிறார் இதற்கிடையே டாக்டர் பனிமலர்க்கும், விமலுக்கும்காதல் செங்கல் சூளை நடத்தும் வல்லவனுக்கு விமலுக்கு மோதல் முடிவு என்ன ஆனது என்பது கதைக்களம்
படத்தில் முக்கிய அம்சம் பாடல்கள் மூன்று டூயட் பாடல்கள் அவ்வளவு ரசிக்க வைத்தது அதன் படப்பிடிப்பு விமலுக்கும் ஸ்ரீதாவுக்குமான கெமிஸ்ட்ரி செம வொர்க் அவுட்
அடுத்து விமலும் சூரியும்செய்யும் வருத்தப்படாத வாலிபர் சங்கத் தலைவர்களாக இருவரும் செய்யும் லூட்டி இடைவேளை வரை செம கலகலப்பு ஒவ்வொரு காட்சியும் ரசித்து மகிழலாம்
வில்லன் கே.ஜி.எப் ராம், விமல் இவர்கள் இருவரும் எப்படி மோதி கொள்கிறார்கள் என்ன நடந்தது என்ற பாணியில் இடைவேளைக்கு பிறகு செம விறுவிறுப்பான மோதல்
தேவதர்ஷினி, நமோ நாராயணா, வினோதினி, இவர்கள் மூவரும் விமலுக்கு முதலில் வேலை வெட்டி இல்லாத போது பயந்து நடுங்குவதும் பிறகு மலேசியா சென்று வந்த பிறகு கோடீஸ்வரன் என்று நினைத்துக் கொண்டு தேவதர்ஷினி தன் மகளை விமலுக்கு கட்டி வைக்க முயற்சி செய்வது செம கலகலப்பு
மலேசியாவில் இருந்து ராமர் சொன்ன 10 கோடி பொய் கேட்டு விமலை மரக்காத்தூர் பிரஸ்டண்டாக ஊர் மக்கள் தேர்வு செய்வது செம காமெடி
முறுக்கு விற்க்கும் டி .எஸ். ஆர் உலக வங்கி லோன் கொடுப்பதாக சூரி அழைத்து வருவது காமெடி
:விமலுக்கு பத்து கோடி பரிசு என்று சூரி ஊர் மக்களிடம் அதை செய்கிறேன் இதை செய்கிறேன் என்று கல்லா கட்டுவது அதற்கு பிறகு உண்மை தெரிந்த பிறகு அவர் பேதிக்கு சென்று அல்லல் படுவது என சூரி நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்
விமல் களவாணி படத்துக்கு பிறகு இந்த படத்தில் அருமையான நடித்திருக்கிறார் அழகாக இருக்கிறார்
மற்றும் படத்தில் நடித்த கே ஜி எஃப் ராம், தேவதர்ஷினி, நமோ நாராயணா , சரவணா சக்தி ,அந்த ஊர் கிராமத்து மக்களாக நடித்த துணை நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் சிரிக்கவும் வைக்கிறார்கள்
இயக்குனர்
:கே. வி .நந்தா இயக்கம் சீராக இருக்கிறது ஒரு காமெடி படத்தை எப்படி கலகலப்பு குறையாமல் கொடுக்க முடியும் ஆபாசம் இன்றி அழகாக கொடுத்திருக்கிறார்
விவசாயிகளுக்கு இடைஞ்சலாக இருக்கும் கருவேல முட்களை பற்றியும் பேசி இருக்கிறார்
படிப்பறிவு இல்லாத மக்கள் செங்கல் சூளைக்குவேலைக்கு செல்லும் கிராம மக்களின் அறியாமையை பற்றி பேசி இருக்கிறார்
தெரிந்தோ தெரியாமலோ நமக்கு ஒரு பதவி கிடைத்து விட்டால் அதை ஊர் மக்களுக்கு நல்ல து செய்ய பயன்படுத்த வேண்டும் என்ற நாயகி யின் நல்ல கருத்தையும் சொல்லி இருக்கிறார்
இசை பிரமாதம்
படத்தின் தயாரிப்பாளரும் , இசையமைப்பாளரும் ,ஜான் பீட்டர் தான் பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது படம் கலகலப்பாக இருந்தது இன்று இளைஞர்களை சந்தோஷமாக வாங்க ஜாலியாக போங்க எனும் ரீதியில் ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறார்
ஒளிப்பதிவு படத்திற்கு மொத்த பலமாக வந்திருக்கிறது பாடல் காட்சிகள் மற்றும் காட்சி அமைப்பு குளுமையாக இருக்கிறது
படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது முதல் பாதியில் காதல், கலகலப்பு, இரண்டாம் பாதியில் மோதல், என விறுவிறுப்பான படத்தை தொகுத்திருக்கிறார்
ஆர்ட் டைரக்டர், பாடல் காட்சிகளுக்கு அருமையாக அரங்கம் அமைத்திருக்கிறார் ஒப்பனை கச்சிதமாக இருக்கிறது ஆடை வடிவமைப்பு பார்ப்பதற்கு ரசிக்க வைக்கிறது காஸ்ட்யூம் டைரக்டர் சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார் மொத்தத்தில் இந்த படவா எல்லோரையும் கவரும்