கதை களம்
சஸ்பென்ஸ் திரில்லர் படமாக வந்திருக்கிறது இந்த வல்லான்
இளம் தொழிலதிபர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.
அது ஏன் எப்படி என்ன நடந்தது என்று
அந்த கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறை துப்பு கிடைக்காமல் தினறுகிறது.
இந்த வழக்கு விசாரணை செய்ய
சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்.சி-யிடம் உயர் அதிகாரி வழக்கை ஒப்படைக்கிறார்.
அவர் வரும் ஆரம்ப காட்சிகளே அசத்தியிருக்கிறார்
அவர்
பணியில் இல்லை என்றாலும், தொழிலதிபர் கொலை வழக்கின் பின்னணியில், தனது தனிப்பட்ட பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கலாம் என்ற நோக்கத்தில் விசாரணை மேற்கொள்ளும் சுந்தர்.சி, பல மர்ம முடிச்சுகள் அவித்தாலும், அடுத்தடுத்த கொலைகளால் மேலும் பல மர்மங்கள் அவரை சூழ்கிறது. இதற்கிடையே, கொலை செய்யப்பட்டவரிடம் இருக்கும் ஏதோ ஒன்றுக்காக அரசியல்வாதியும், சில காவல்துறை அதிகாரிகளும் அவருக்கு எதிராக சதி செய்ய, அவைகளை முறியடித்து கொலையாளியை அவர் எப்படி கண்டுபிடிக்கிறார் ?, கொலைக்கான பின்னணி ? மற்றும் இந்த வழக்குடன் தொடர்புடைய அவரது பிரச்சனை என்ன? ஆகிய கேள்விகளுக்கான விடையை விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சொல்வதே ‘வல்லான்’.
படம் முழுக்க விறுவிறுப்பாக கொண்டு சென்று இயக்கி இருக்கிறார் இயக்குனர் சஸ்பென்ஸ் கடைசி வரை காப்பாற்றி இருக்கிறார்
சுந்தர் சி துப்பு துலக்க ஆரம்பத்திலிருந்து படம் ரெக்கை கட்டி பறக்கிறது
இயக்குனர் சுந்தர் சி
இயக்குனர்
சுந்தர்.சி,
மதகஜராஜா படம் மூலம் வெற்றி பட்டியலில் இடம் பிடித்தார்
இந்த படம் மூலம் கதாநாயகனாகவும் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளார். ஆரம்பம் முதல் முடிவு வரை, அடுத்து என்ன ? என்ற எதிர்பார்ப்புடன் ஜெட் வேகத்தில் படம் பயணிக்கிறது.
2025 தொடக்கமே இயக்குனர் சுந்தர் சி. அவர்கள் வெற்றி
ஆண்டாக துவங்கியிருக்கிறது
இயக்கத்திலும் ஜெயித்திருக்கிறார் நடிப்பிலும் ஜெயித்திருக்கிறார்
டூட்டியில் இல்லாத இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சுந்தர்.சி, ஆக்ஷன் காட்சிகளிலும், கொலை வழக்கை விசாரிக்கும் காட்சிகளிலும் நேர்த்தியாக நடித்திருக்கிறார்
கொலையை கண்டுபிடிக்கும் நேர்த்திக்கு சபாஷ் போடலாம்
தனது வருங்கால மனைவியின் கொடூர நிலையை பார்த்து கதறும் காட்சியில் நடிப்பில் அசத்தியிருக்கிறார். கதாபாத்திரத்திற்கு மெருகேற்றும் படி நடித்திருக்கிறார்
வாழ்த்துக்கள் சார்
படத்தின்
நாயகி தன்யா ஹோப் அழகாக இருக்கிறார
இன்னும் கொஞ்சம் நேரம் அவரை காட்டி இருக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு
நிறைவான நடிப்பு அழகான அம்சமான நாயகி
ஹெபா பட்டேல், கவர்ச்சியாக கலக்கி இருக்கிறார்
இளைஞர்களுக்கு விருந்து
இளம் தொழிலதிபராக நடித்திருக்கும் கமல் காமராஜ், அவரது மனைவியாக நடித்திருக்கும் அபிராமி வெங்கடாச்சலம், சாந்தினி தமிழரசன், அருள் டி.சங்கர், தலைவாசல் விஜய், ஜெயக்குமார், டி.எஸ்.கே என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் திரைக்கதையில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள். அனைவர் நடிப்பும் இயல்பாக இருக்கிறது ரசிக்கும் படி இருக்கிறது
ஒளிப்பதிவாளர் மணி பெருமாள்
ஊட்டி காட்சிகளை பார்வையாளர்களின் கவனம் ஈர்க்கும் கோணத்தில் காட்சிப்படுத்தியிருப்பதோடு, ஆக்ஷன் காட்சிகளையும் ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறது. கதாபாத்திரங்களை தனது கேமரா கண்கள் மூலம் அழகாக காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் மணி பெருமாள், தனது பணியின் மூலம் படத்தின் மேக்கிங் மற்றும் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறார். படத்திற்கு பலமாக காட்சிகள் கவரும்படி அமைத்ததில் கேமராமேனுக்கு வாழ்த்துக்கள்
இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி
பாடல்கள் இனிமை. பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்திற்கு
பின்னணி இசை மிகவும் முக்கியம்
அதை கவனமாக கையாண்டு படத்திற்கு உயிர் ஊட்டி இருக்கிறார் இசையமைப்பாளர்
படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ்
ஒரு கொலை அதை தொடர்ந்து பல வியூகம் என
எந்த ஒரு காட்சியையும் நீளமாக சொல்லாமல், அதே சமயம் கதைக்களத்தின் தன்மை மாறாமல் அனைத்து விசயங்களையும் அளவாக தொகுத்து படத்தை வேகமாகவும், சுவாரஸ்யமாகவும் பயணிக்க வைத்திருக்கிறார்.
சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் என்பதால்
படத்தொகுப்பாளர் டேபிளில் படம் வெற்றியை ஆரம்பித்திருக்கிறது
இயக்குநர் வி.ஆர்.மணி சேயோன்,
ஒரு கொலை அதை சுற்றி நடக்கும் கதைக்கான திரைக்கதையை பல திருப்பங்களுடன், சிறு தொய்வில்லாமல் நகர்த்திச் சென்று ரசிகர்களுக்கு முழுமையான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் அனுபவத்தை கொடுத்திருக்கிறார்
படத்தின் ஆரம்பத்திலேயே பார்வையாளர்களை கதைக்குள் இழுத்துவிடும் இயக்குநர் மணி சேயோன், அனைத்து கதாபாத்திரங்களையும் திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்க வைத்ததோடு, நாயகனின் திருமண ஏற்பாடு, அதை தொடர்ந்து வரும் காதல் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் என அனைத்தையும் சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் வடிவமைத்திருப்பது படத்திற்கு பெரும் பலம்
படத்தின் முதல் காட்சி முதல் இறுதி வரை பல திருப்பங்கள் இருந்தாலும், எதையும் பார்வையாளர்களின் யூகத்தின்படி சொல்லாமல், அவர்களை முழுமையாக படத்துடன் ஒன்றிவிட செய்யும் விதத்தில் திரைக்கதையை மிக கூர்மையாக வடிவமைத்திருக்கும் இயக்குநர் முழு படத்தையும் சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்க வைத்திருக்கிறார்
.
நடிகர் நடிகைகள்
Cast – Sundar.C. Tanya Hope, Hebah Patel, Kamal Kamaraj, Abirami Venkatachalam, Chandhini Tamilarasan, Thalaivasal Vijay, Jayakumar, TSK.
தொழில்நுட்ப கலைஞர்கள்
*Written & Directed By – VR Mani Seiyon
Producer – Dr. VR Manikandaraman & V Gayathri
Produced by – VR Della Film Factory Pvt Ltd
Executive Producer – Ashok Sekar
Director of Photography – Mani Perumal
Music Director – Santhosh Dhayanidhi
Editor – Dinesh Ponraj
Art Director – Sakthee Venkatraj. M
Stunt Director – Vicky
Lyrics – Umadevi
Choreography – Kalyan, Santhosh
Singers: karthik and Rakshitha Suresh
Writing Associate – Aravindh Sachidanandham
Sound Mixing & Design – S. Sivakumar
Costume Designer – Nikhita Niranjan
Make Up Artist – A. Kothandapani
Costumer – Sheik Nabul
Colorist – Prasath Somasekar
Stills – Rajendran
DI – Knack Studios
Publicity Designer – NTalkies
PRO – Sathish (AIM)
Production Controller – Saravana Kumar*
என இந்தப் படத்தில் பங்கு பெற்ற நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், வாழ்த்துக்கள் வல்லான் நிச்சயம் வெற்றி பெறுவான்