Casting : Thaman Kumar, Swetha Dorathy, Black Pandi, Rekha Suresh, Ranjana Natchiyar, Yogi Ram, Ranjan Kumar, Jayanthi Mala, Karate Raja, Grane Manohar
Directed By : EK Murugan
Music By : Hamara CV
Produced By : Akshaya Movie Makers – Ln E.Nataraj
கதை என்ன வாங்க பார்க்கலாம்
நாயகன் தமன் குமார் மற்றும் நாயகி ஸ்வேதா டோரத்தி இருவரையும் ரவுடி கூட்டம் துரத்துகிறது. அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக நீண்ட நாட்களாக பூட்டப்பட்டு கிடக்கும் பூங்காவிற்குள் (பார்க்) நுழைகிறார்கள் அங்குஅமானுஷ்யம். ரவுடிகளை விடவும் பெரிய ஆபத்தாக அவர்களை ஆட்கொள்கிறது. அதனால் எப்படிப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்
அங்கு என்ன நடந்தது என்பதை சுவாரசியமாக சொல்லி இருக்கிறார் கள்
நடிகர் தமன் குமார், இந்த படத்தில் வேறு ஒரு பரிணாமத்தில் பார்வையாளர்களை பயமுறுத்தியிருக்கிறார். நாயகியை கண்டதும் காதல், டூயட், காமெடி, ஆக்ஷன் என அனைத்து கமர்ஷியல் விசயங்களிலும் பட்டய கிளப்பியிருப்பவர், ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டவும் செய்திருக்கிறார்.
அழகான முகம் ஆனால் விவகார தோற்றம்
நாயகியாக நடித்திருக்கும் ஸ்வேதா டோரத்திக்கு வழக்கமான கமர்ஷியல் நாயகியின் வேலை என்றாலும், அதை நிறைவாக செய்திருக்கிறார்.
நாயகனுடன் டூயட் போடுவது அமானுஷ் அமர்ந்தவுடன் கட்சி கதறுவது என ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் பிளாக் பாண்டி, தனது நடிப்பில் பல நடிகர்களின் பாடி லேங்வேச்களை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது காமெடி காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது.
நல்ல தேர்வு
கிரேன் மனோகர், ரேகா சுரேஷ், கராத்தே ராஜா, ஜெயந்தி மாலா, ரஞ்சன் குமார், ரஞ்சனா நாஞ்சியார், யோகி ராம், விஜய் கணேஷ் என்று மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதையோட்டத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள்.
எல்லோரும் தங்கள் பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்
ஹமரா.சிவி இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சூப்பர் அதுவும் அந்த ஐட்டம் சாங் செம. பாண்டியன் குப்பனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. குருசூர்யாவின் படத்தொகுப்பு காட்சிகளை வேகமாக நகர்த்தி சென்றிருக்கிறது.
ஒளிப்பதிவாளர் படத்தொகைப்பாளரும் படத்தைக் கச்சிதமாக கொண்டு சென்றிருக்கிறார்கள்
நகைச்சுவை மற்றும் திகில் இரண்டும் திரைக்கதையில் முக்கிய பங்கு வகித்தாலும், இரண்டையும் இரண்டு பகுதிகளாக காட்டி படத்தை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் இ.கே.முருகன்.
வழக்கமான திகில் கதை தான் என்றாலும், அதற்காக இயக்குநர் பயன்படுத்தியிருக்கும் பூங்கா என்ற களம் புதிதாகவும், அதை காட்சிப்படுத்திய விதம் மிரட்டலாகவும் இருக்கிறது.
பூங்காவுக்குள் பேய் என்பது தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஒன்று வித்தியாசமான கதைக்களம்
காதல், காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட், திகில் என அனைத்து விசயங்களையும் அளவாக கையாண்டிருக்கும் இயக்குநர் இ.கே.முருகன், அனைத்து தரப்பினருக்குமான ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படத்தை கொடுத்ததில் வெற்றி பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில், பார்க். நல்ல தரமான விரும்பும் வகையில் அமானுஷ்யம் கலந்து கமர்சியலாக படத்தை கொடுத்து இருக்கிறார்கள் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் வாழ்த்துக்கள் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த மக்கள் தொடர்பாளர் சக்தி சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இந்த பார்க் முதல் பாதி வயிறு வலிக்கும் இரண்டாவது பாதி ஆச்சரியத்தில் கண்கள் வியக்க வைக்கும் பார்க்க வேண்டிய படம்” பார்க்”